பள்ளி மாணவர்களுக்கு ரூ1000 உதவித் தொகை!

 

 தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் உயர்கல்வியை தொடர அரசு சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதற்காக  ஒவ்வொரு மாதமும் உதவித்தொகையும் வழங்கப்பட்டு வருகிறது. மாணவிகள் மத்தியில் உயர் கல்வி படிப்பை உறுதி செய்ய அரசு இத்திட்டத்தை செயல்படுத்தி வருகின்றது.


இந்நிலையில் பிளஸ் 2 மற்றும் பட்டய படிப்பை முடித்த எஸ்சி எஸ்டி மாணவர்களுக்கு இலவச சுருக்கெழுத்து, கணினி, தட்டச்சு மற்றும் போட்டி தேர்வு பயிற்சிக்கான சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதற்கு விண்ணப்பிக்க 18 வயது முதல் 27 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பயிற்சி காலத்தில் மாதம் ரூ1000   உதவித்தொகை மற்றும் இலவச போட்டி தேர்வு பயிற்சி புத்தகங்கள் மற்றும் எழுது பொருள்கள் வழங்கப்படும். இது குறித்த மேலதிக தகவல்களுக்கு  0444-24615112 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!