undefined

 மின்சாரம் தாக்கி உயிரிழந்த சிறுவன் குடும்பத்துக்கு நிவாரணத் தொகை... முதல்வர் அறிவிப்பு!

 
 

 திருவாரூரில் மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம்  குறித்து முதல்வர் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் அந்த சிறுவனின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்து ரூ2 லட்சம்  நிதியுதவி அளித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  மின்சார விபத்தில் உயிரிழந்த சிறுவனின் பெற்றோருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.  ரூ.2 லட்சம் உதவித்தொகையும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் சிறுவனின் பெற்றோருக்கு ரூ.50,000 நிவாரணமும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர்  கோட்டகச்சேரி பகுதியில் வசித்து வருபவர்  ராமதாஸ். இவருடைய மனைவி அன்புச்செல்வி. இவர் கூலித் தொழில் செய்து வருகிறார். இவர்களுடைய மகன் 15 வயது  மதன்ராஜ்.  இவர் மன்னார்குடியில் உள்ள அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார்.கோட்டகச்சேரி மாரியம்மன் கோவிலில் ஆனி மாத திருவிழாவில்  மதன்ராஜ் மற்றும் அவருடைய நண்பர்கள் ரூபன் (21), சஞ்சய் (19), சித்தார்த்தன் (22) ஆகிய இளைஞர்கள் சேர்ந்து  பேனர் வைத்துள்ளனர்.

அப்போது, அந்த பேனர் மேலே இருக்கும் மின் கம்பி மீது உரசியது. அதை அகற்ற முயன்றபோது, 4 பேர் மீதும் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டனர்.உடனடியாக அப்பகுதி மக்கள் இளைஞர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.  அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள், மதன்ராஜ் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதனையடுத்து, மதன்ராஜ் நண்பர்களான ரூபன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வரும் நிலையில், மற்ற இருவர் சிறிய காயத்துடன் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர்.


மேலும், இறந்த மதன்ராஜ் உடலை மீட்ட கூத்தாநல்லூர் போலீசார் பிரேத பரிசோதனைக்காக  அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.  இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருவிழாவில் உயிரிழப்பு ஏற்பட்டதால் இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!