சிவப்பு நிற ஆடையில் ரசிகர்களை கவர்ந்திழுக்கும் ரம்யா.. இணையத்தில் வைரலாகும் போட்டோஷீட்..!

 
சமீபத்தில் நடிகை ரம்யா பாண்டியன் நடத்திய போட்டோஷீட் இணையத்தில் வைரலாகி வருகிறது.

மம்முட்டிக்கு ஜோடியாக 'நண்பகல் நேரத்து மயக்கம்' என்றும் படம் மூலம் மலையாளத்தில் ரம்யா பாண்டியன் அறிமுகமானார். முதல் மலையாள படத்திலேயே சூப்பர் ஸ்டார் நடிகருடன் ரம்யா இணைந்து நடித்ததால், பல இளம் நடிகைகளை பொறாமை பட வைத்தார். ஆனால் இப்படமும்  பிளாப் ஆனது .

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர், கதை தேர்வில் கூடுதல் கவனம் செலுத்தி வரும் இடையழகி ரம்யா பாண்டியன் தரமான கதைகளையும், நடிப்பு திறமையை வெளிக்காட்டும் விதத்தில் அமையும் கதாபாத்திரங்களைஏ தேர்வு செய்து நடித்து வருவதை பார்க்க முடிந்தாலும், ஏனோ இவர் எதிர்பார்த்த வெற்றி இன்னும் கிடைக்கவில்லை.

இதை தொடர்ந்து இவர் தற்போது 'இடும்பன் காரி' என்கிற படத்தில் நடித்து முடித்துள்ளார். விரைவில் இப்படம் ரிலீஸ் ஆக உள்ளது. இதை தொடர்ந்து ஒரு சில படங்களில் ரம்யா நடித்து வருவதுடன், Accidental Farmer and Co என்கிற வெப் சீரிஸிலும் நடித்துள்ளார். பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டாலும், தாறுமாறாக கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டாலும் இன்னும் எதிர்பார்த்த அளவுக்கு படவாய்ப்பு கிடைக்காமல் தவித்து வருகிறார்.

இந்நிலையில், மீண்டும் தன்னுடைய இடையழகை காட்டி எடுத்துக்கொண்ட சில புகைப்படங்களை ரம்யா பாண்டியன் வெளியிட்டுள்ளார். சிவப்பு நிற பாவாடை ஜாக்கெட் மட்டும் அணிந்து... தாவணி அணியாமல் ஒல்லி - பெல்லி இடுப்பை காட்டி இளம் ரசிகர்களை இம்சித்துள்ளார். இந்த போட்டோஸ் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருவதோடு லைக்குகளையும் குவித்து வருகிறது.