பூனம் பாண்டேவுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டணை....?!

 

நடிகை பூனம் பாண்டே  கர்ப்பப்பை வாய் புற்றுநோய் காரணமாக காலமானதாக கடந்த 2 நாட்களுக்கு முன் செய்திகள் வெளியாகின. அடுத்த நாள் மர்ம மரணம் என மேலாளர் அறிவித்தார். அவருடைய தோழி பூனம் உயிருடன் இருந்ததாக பதிவிட்டார். இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியும், குழப்பமும் அடைந்தனர். இந்த தகவல்களுக்கு முடிவு கட்டும் வகையில்  நேற்று திடீரென பூனம் பாண்டே தனது இன்ஸ்டா  பக்கத்தில் தான் உயிருடன் இருப்பதாகவும், கர்ப்பப்பை வாய் புற்று நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இந்த செய்தியை வெளியிட்டதாகவும் பதிவு ஒன்றை வெளியிட்டார்.

அத்துடன்  இந்த செய்தி யார் மனதையாவது பாதித்திருந்தால் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் எனவும் குறிப்பிட்டிருந்தார்.  இந்த வீடியோவிற்கு சமூக வலைதளங்களில் பல்வேறு கருத்துகள் வெளியாகின.  நோய்க்குரிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இவ்வாறு பொய் சொல்வது மட்டமான செயல் . சுய விளம்பரத்திற்காக செய்யும் பைத்தியக்காரத்தனம் எனவும்  நெட்டிசன்கள் விமர்சனம் செய்தனர்.  


 2000ம் ஆண்டு இயற்றப்பட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவின் சட்டப்படி சமூக வலைதளங்களில் தவறான தகவல் பரப்பினால் 3  ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் .   அதே தவறை திரும்ப செய்தால்  5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் எனவும்  கூறப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி 5 லட்சம் முதல் 10 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.  

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

இந்நிலையில் சமூக வலைதளத்தில்   தகவல் பரப்பிய பூனம் பாண்டே மீது சமூக ஆர்வலர்கள் வழக்கு தொடர்ந்தால் அவருக்கு அதிகபட்சமாக  5  ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை கிடைக்கலாம் எனத் தெரிகிறது.