பகீர்... ரோட்டின் ஓரத்தில் நடந்து சென்றவர் மாடு முட்டித் தூக்கி வீசியதில் பலியான சோகம்!

 

சாலையின் ஓரத்தில் நடந்து சென்றவர்  மாடு முட்டி தூக்கி வீசப்பட்டதில், அருகே வந்துக் கொண்டிருந்த அரசு பேருந்தின் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்துள்ள  சம்பவம்  நாகையில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. 

நாகை மேல கோட்டவாசல் பகுதியைச் சேர்ந்தவர் ராஜாராமன் மகன் சபரிராஜன்(55). இவர் மேலகோட்டை வாசல் பகுதியில் பெட்ரோல் நிலையம் அருகே நேற்று  சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த போது, அந்த வழியாக சென்று கொண்டிருந்த மாடு ஒன்று அவரை முட்டி தூக்கி வீசியது. இதில், சபரிராஜன் அருகே வந்து கொண்டிருந்த அரசுப் பேருந்தின் அருகே சென்று விழுந்தார். கீழே விழுந்த சபரிராஜனின் மீது, பேருந்தின் பின்புற சக்கரம் ஏறி இறங்கியது. இதில் தலை நசுங்கிய சபரிராஜன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 

இது குறித்து தகவல் அறிந்துவந்த  நாகை நகர காவல் துறையினர் உடலை கைப்பற்றி நாகை அரசு மருத்துவ கல்லூரிக்கு உடல் கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்து முதியவரின் உயிரிழப்பு குறித்து வழக்குப்பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கால்நடைகள் மற்றும் வளர்ப்பு விலங்குகளால் விபத்து மற்றும் உயிரிழப்பு சம்பவம் நடைபெறுவதை தடுக்க தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும், காவல்துறையினரும் கால்நடைகளின் உரிமையாளர் மற்றும் வளர்ப்பு விலங்குகளின் உரிமையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

60 நாட்களுக்கு சபரிமலை போறவங்களுக்கு உணவு தங்குமிடம் எல்லாமே இலவசம்

ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!