செம...  ஜூன் முதல் பேருந்து, ரயில் , மெட்ரோ அனைத்துக்கும் ஒரே டிக்கெட்.. பயணிகள் உற்சாகம்!

 

 சென்னையில் பொதுப்போக்குவரத்துக்காக மின்சார ரயில் , மெட்ரோ ரயில் பேருந்து ஆகியவை இயக்கப்பட்டு வருகின்றன. இதற்காக எதில் பயணம் செய்கிறோமோ அதில் பயணச்சீட்டு எடுக்க வேண்டிய நிலை இருந்து வந்தது. இந்நிலையில்  சென்னையில் பேருந்து, மின்சார ரயில், மெட்ரோ ரயில் என அனைத்திலும் பயணம் செய்ய ஒரே டிக்கெட் முறை அமல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இதற்காக தனியாக செயலி உருவாக்க சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் டெண்டர் கோரி இருந்தது.  இந்நிலையில் ஜூன் 2ம் வாரம் இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வர உள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.  இதன் மூலம் ஒரே டிக்கெட்டை பயன்படுத்தி 3 வகையான போக்குவரத்திலும் பயணிக்க வசதியாக பிரத்யேக கார்டு ஒன்று வழங்கப்படும். இந்தக் கார்டுகளை  ரீசார்ஜ் செய்து மக்கள் பயணித்துக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் இந்த அறிவிப்பு பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!