undefined

 2வது முறையாக ஓம் பிர்லா மக்களவை சபாநாயகராக தேர்வு!

 

 

இந்தியாவில் 18வது மக்களவையின் சபாநாயகராக 2 வது முறையாக ஓம் பிர்லா மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பாஜக கூட்டணி கட்சிகளுடன் 3 வது முறையாக ஆட்சியை பிடித்துள்ளது. காங்கிரஸ் எதிர்க்கட்சியாக உள்ளது. இரு தரப்பிலிருந்தும் சபாநாயகர் பதவிக்கு  போட்டியிட்டனர். அதன்படி  முந்தைய மக்களவையின் சபாநாயகரான ஓம் பிர்லாவும், எதிா்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணி சார்பில் காங்கிரஸின் கொடிக்குன்னில் சுரேஷும் போட்டியிட்டனர். சுதந்திரத்துக்குப் பிறகு முதல் முறையாக மக்களவைத் தலைவர் பதவிக்கு இன்று ஜூன் 26 தேர்தல் நடைபெற்றது.


இந்திய பாராளுமன்ற வரலாற்றில் இதுவரை, மக்களவை சபாநாயகரை தேர்தலின்றி ஒருமனதாக அனைத்துக் கட்சிகளும் இணைந்து தேர்ந்தெடுத்து வந்தன. அதுபோல, இந்த முறையும் கட்சிகளிடையே ஒருமித்த கருத்தை ஏற்படுத்தும் வகையில், பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அலுவலகத்தில் நேற்று  ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ராஜ்நாத் சிங்குடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசியத் தலைவரும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சருமான ஜெ.பி.நட்டா அனைவரும் கலந்து கொண்டனர்.  இந்த கூட்டத்தில்  ‘இந்தியா’ கூட்டணி சார்பில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால், திமுகவின் டி.ஆர்.பாலு கலந்து கொண்டனர்.  இந்த கூட்டத்தில்  மக்களவை துணை சபாநாயகர் பதவியை எதிர்க்கட்சிக்கு போட்டியின்றி வழங்க வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டது. இதற்கு பாஜக தலைவர்கள் ஒப்புக்கொள்ளாத நிலையில், மக்களவைத் தலைவர் பதவிக்கு தங்கள் தரப்பிலும் வேட்பாளரை நிறுத்துவோம் என ‘இந்தியா’ கூட்டணி முடிவெடுத்தது. எனவே, மக்களவை தலைவர் பதவிக்கு இரு தரப்பிலும் நேற்று வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டன. 


இந்நிலையில், 18வது மக்களவை சபாநாயகர் பதவிக்கான தேர்தல் தொடங்கியது. என்டிஏ கூட்டணி சார்பில் போட்டியிட்ட ஓம் பிர்லாவின் பெயரை பிரதமர்  மோடி முன்மொழிய மத்திய அமைச்சர்கள், NDA கூட்டணி கட்சி எம்.பி.,க்கள்  வழிமொழிந்தனர். இதனைத் தொடர்ந்து, இந்தியா கூட்டணி தரப்பில் காங்கிரஸின் கொடிக்குன்னில் சுரேஷ் பெயரை கனிமொழி மற்றும் சுப்ரியா சுலே  முன்மொழிந்தனர். 
மக்களவைத் தலைவரை தேர்ந்தெடுக்க குரல் வாக்கெடுப்பை மக்களவை இடைக்காலத் சபாநாயகர் நடத்தினார். இதில், மக்களவைத் தலைவராக ஓம் பிர்லா தேர்ந்தெடுக்கப்பட்டார். குரல் வாக்கெடுப்பு மூலம் அவர் புதிய சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.  இதை தொடர்ந்து சபாநாயகர் இருக்கைக்கு பிரதமர்  மோடி, எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி ஆகியோர் ஓம் பிர்லாவை அழைத்து சென்று அவருக்கு கை குலுக்கி வாழ்த்துக்களை  தெரிவித்து அமர வைத்தனர்.
 இதில் ஓம் பிர்லா ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர். இவர்  மாணவ பருவத்திலேயே பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டவர். கோட்டா மாவட்ட பாரதிய ஜனதாவின் இளைஞர் அணி தலைவராகவும், அதன் மாநிலத் தலைவராகவும் பொறுப்பு வகித்தவர்  . 1997 முதல் 2003-ம் ஆண்டு வரை பாஜகவின் இளைஞர் அணி தேசிய துணைத் தலைவராகவும் பதவி வகித்தவர். முதல் முறையாக கோட்டா தெற்குத் தொகுதியில் போட்டியிட்டு சட்டப்பேரவை உறுப்பினராக தேர்வானார்.  
தொடர்ந்து 3 முறை சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்த ஓம் பிர்லா   2019ல்  கோட்டா மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு முதன்முறையாக பாராளுமன்றத்திற்குள் நுழைந்தார். தற்போது 2வது முறையாகவும் அதே தொகுதியில் இருந்து மக்களவை உறுப்பினராக தேர்வாகியுள்ளார். கடந்த முறை ஓம் பிர்லா  சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. ஆனால், மக்களவையில் சபாநாயகருக்கான பணியை சிறப்பாக செய்து பலரது வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் பெற்றவர்.  

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!