அதிர்ச்சி... என்எல்சி தொழிலாளி கன்வேயர் பெல்ட்டில் சிக்கி உயிரிழப்பு; உறவினர்கள் போராட்டம்!

 
 

கடலூர் மாவட்டம் நெய்வேலி என்எல்சி இந்தியா  நிறுவனத்தில் இரண்டாவது பழுப்பு நிலக்கரி சுரங்கத்தில் கன்வேயர் பெல்ட் சுத்தம் செய்யும் போது கன்வேயர் பெல்ட்டில்  சிக்கி சொசைட்டி தொழிலாளி அன்பழகன் என்பவர் உயிரிழந்தார். இதையடுத்து அவரது உறவினர்கள் இரண்டாவது பழுப்பு நிலக்கரி  சுரங்கத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


நெய்வேலி அருகே உள்ள ஊமங்கலம், புது இளவரசன்பட்டு கிராமத்தைச் சேர்ந்த கண்ணாயிரம் மகன் அன்பழகன்(51). இவர் என்எல்சி இந்தியா நிறுவனத்தின் இரண்டாவது நிலக்கரி சுரங்கத்தில் கன்வேயர் பெல்ட் பிரிவில் பணியாற்றி வந்தார். சொசைட்டி தொழிலாளியாக உள்ளார். இந்த நிலையில் இன்று (ஜூலை 8) காலை வழக்கம்போல அன்பழகன் இரண்டாவது நிலக்கரி சுரங்க கன்வேயர் பெல்ட் பிரிவுக்கு சென்று பணியாற்றி வந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் கன்வேர் பெல்ட்டில் சிக்கி உயிரிழந்தார்.

இதனைத் தொடர்ந்து அவரது உடல் சுரங்கத்திலிருந்து ஆம்புலன்ஸ் மூலம் வெளியில் எடுத்து செல்லப்பட்டது. இது குறித்த தகவல் அறிந்த அவரது  உறவினர்கள் என்எல்சி இரண்டாவது பழுப்பு நிலக்கரி சுரங்கத்தை முற்றுகையிட்டு ஆம்புலன்ஸை வழிமறித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். உயிரிழந்த அன்பழகன் உடலைப் பார்த்து அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் கதறி அழுதனர்.இதுகுறித்து தகவல் அறிந்த மந்தாரக்குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், போலீசார் இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!