மோடி விண்வெளி பயணம்... இஸ்ரோ தலைவர் நெகிழ்ச்சி !
இஸ்ரோ நிறுவனம் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தை செயல்படுத்த முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அடுத்த வருடம் நடக்கும் சுகன்யான் சோதனை பயணத்திற்கு சுபான்சு சுக்லா, அஜித் கிருஷ்ணன், அங்கத் பிரதாப், பிரசாந்த் நாயர் ஆகிய விண்வெளி வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் இஸ்ரோ தலைவர் சோம்நாத் ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.
இந்த பேட்டியில் பல சுவாரசியமான தகவல்களை பகிர்ந்து கொண்டார். அப்போது அதில் இந்தியாவில் பயிற்சி பெற்ற மற்றும் அனுபவம் மிக்க விண்வெளி வீரர்கள் குறைவு.இதனால் விண்வெளிக்கு முதலில் யாரை அனுப்புவது என்ற சிக்கல் எழுந்துள்ளது. தற்போது முதல் முறையாக தற்போது சோதனை பயணம் செய்யப்பட இருப்பதால் விஐபிகள் மற்றும் ஆர்வம் உள்ளவர்களை அனுப்ப முடியாது. அந்தப் பயணம் முழுக்க முழுக்க பாதுகாப்பானது என்று உணர்ந்த பிறகு தான் விஐபிகளை அனுப்ப முடியும் என்றார். அவரிடம் பிரதமர் மோடியை விண்வெளிக்கு அனுப்புவீர்களா எனக் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு சோம்நாத் பிரதமர் மோடியை விண்வெளிக்கு அனுப்பினால் நான் மட்டுமல்ல மொத்த நாடே பெருமைப்படும். அது மிகவும் சிறந்த தருணமாக இருக்கும். அந்தப் பயணத்தில் முழுமையான பாதுகாப்பு இருக்கிறது என உணர்ந்த பிறகு பிரதமர் போன்ற உயர்ந்த பொறுப்பில் இருப்பவர்களை விண்வெளிக்கு அனுப்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!