கல்யாண பத்திரிக்கையில் விடுபட்ட பெயர்.. மணமகளின் தாய் எடுத்த விபரீத முடிவு!

 

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள ருத்ரசோலை மேலத்தெருவை சேர்ந்தவர் கமலக்கண்ணன் (வயது 52). கொத்தனார். இவரது மனைவி மாலதி (38). இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில் மகள் சத்தியகலாவுக்கு வரும் 27ம் தேதி திருமணம் நடைபெற இருந்தது.
இதற்காக திருமண பத்திரிக்கை அச்சிடப்பட்டு உறவினர்களுக்கு வழங்கப்பட்டது.

ஆனால் திருமண பத்திரிக்கையில் மாலதியின் உறவினர் ஒருவரின் பெயர் குறிப்பிடப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து மாலதி கணவர் கமலக்கண்ணனிடம் கேட்டு தகராறு செய்தார். இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டதால், மாலதி வீட்டின் பின்புறமுள்ள வேப்ப மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த காட்டுமன்னார்கோவில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாலதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காட்டுமன்னார்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து காட்டுமன்னார்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!