ஜூலை 10 இடைத்தேர்தல்: இன்று முதல் 4 நாட்களுக்கு டாஸ்மாக் விடுமுறை!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் 29 வேட்பாளர்கள் போட்டியிடுவது உறுதியாகியுள்ள நிலையில், திமுக, பாமக, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட கட்சிகள் பரப்புரையை தீவிரமாக மேற்கொண்டுவருகின்றனர்.
இந்நிலையில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலை முன்னிட்டு விழுப்புரம் மாவட்டத்தில் இன்று ஜூலை 8ம் தேதி முதல் வாக்குப்பதிவு நாளான ஜூலை 10ம் தேதி வரையிலும், அதே போன்று வாக்கு எண்ணிக்கை நாளான ஜூலை 13ம் தேதியும் டாஸ்மாக் கடைகளை மூட ஆட்சியர் பழனி உத்தரவிட்டுள்ளார்.
இந்த நாட்களில் அனைத்து டாஸ்மாக் கடைகள், தனியார் மதுபானக் கூடங்கள், சொகுசு ஹோட்டல்களிலும் மதுபான சப்ளை உள்ளிட்ட எதுவும் இருக்க கூடாது எனவும், மீறினால் கடும் நடவடிக்கை எடுப்படும் என்றும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!