ISIS பயங்கரவாத அமைப்பின் தலைவர் கைது!!  என்ஐஏ அதிரடி!!

 

சென்னையில் ISIS பயங்கரவாத அமைப்பின் தலைவர் சையது நபில் அகமது. இவரை  என்ஐஏ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.  திருச்சூர் அடிப்படையான ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் தலைவரை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள்  சென்னையில் கைது செய்தனர் .சையது நபில் தமிழ்நாடு, கர்நாடக என மாறி, மாறி தலைமறைவாக இருந்து வந்த நிலையில்   போலி ஆவணங்களை தயாரித்து  நேபாளத்திற்கு தப்பிச் செல்ல முயன்றார்.

அப்போது காவல்துறையினர் சுற்றிவளைத்து கைது செய்தனர்.  என்ஐஏ அதிகாரிகளால் கைதான ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் தலைவர் சையது நபில் அகமதுவிடம் இருந்து முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.  மேலும், ஐஎஸ் பயங்கரவாத அமைப்புக்கு நிதி திரட்டுவது, பயங்கரவாத தாக்குதலை நடத்த திட்டமிட்டது அனைத்தும் விசாரணையில் அம்பலமாகி இருப்பதாக   தகவல் வெளியாகியுள்ளது.  

ஈரோடு வனப்பகுதியில் தலைமறைவாக இருந்த ஆசிப்பையும் என்ஐஏ அதிகாரிகள் கைது செய்திருந்த நிலையில், இன்று ISIS பயங்கரவாத அமைப்பின் தலைவர் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை