இந்திய மாணவர் அருவியில் மூழ்கி பலி... அமெரிக்காவில் தொடரும் விபரீதம்!

 
 

அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தின் அல்பேனி பகுதியில் பார்பர்வில் அருவி அமைந்துள்ளது. இந்த அருவிக்கு தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். இந்நிலையில், கடந்த 7-ம் தேதி அருவியில் குளித்துக் கொண்டிருந்த 2 பேர் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டனர். 

இந்த தகவலை நியூயார்க்கில் உள்ள இந்திய தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது. இது குறித்து  வெளியிட்டுள்ள பதிவில், “ஜூலை 7-ம் தேதி நியூயார்க்கில் உள்ள பார்பர்வில்லி நீர்வீழ்ச்சியில் மூழ்கி இறந்த ட்ரைன் பல்கலைக்கழக மாணவர் திரு. சாய் சூர்யா அவினாஷ் காடேவின் துயர இழப்பால் நாங்கள் மிகவும் வருத்தப்படுகிறோம். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். 

இந்திய தூதரகம் காடேவின் உடலை இந்தியாவிற்கு கொண்டு செல்வதற்கு NOC வழங்குவது உட்பட தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குகிறது. இந்த கடினமான நேரத்தில் எங்கள் எண்ணங்களும் பிரார்த்தனைகளும் அவரது குடும்பத்தினருடன் உள்ளன.” என்று பதிவிட்டுள்ளது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!