undefined

 அசத்தல்... 70 அடி பாலத்தை 72 மணி நேரத்தில் கட்டி முடித்த இந்திய ராணுவ வீரர்கள்!

 
 இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான சிக்கிமில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. கடந்த இரு வாரங்களுக்கு முன்பு சிக்கிமில் வரலாறு காணாத மழை பெய்து பல இடங்களில் தனி தீவு போல காட்சியளித்தது. சுமார் 1600 சுற்றுலா பயணிகள் இந்த வெள்ளத்தில் சிக்கித் தவித்தனர். செல்போன் சிக்னல்கள் முடங்கி, மின்சாரம் தடைபட்டு, சாலைகள் துண்டிக்கப்பட்டு பொதுமக்கள் கடும் சிரமங்களை அனுபவித்து வந்தனர். 

பாலத்தை முழுவதுமாக கட்டி முடித்ததோடு மட்டுமல்லாமல் கனமழையால் பாதிப்படைந்த எல்லைக் கிராமங்களுக்கு சென்று மக்களுக்கு நிவாரண உதவிகளையும் வழங்கினார்கள். இந்த பாலம் உடனடியாக கட்டி முடிக்கப்பட்டதால் வெள்ளத்தில் தவித்த மாங்கன் மாவட்ட மக்களுக்கு அத்தியாவசிய மருத்துவ உதவிகளுளையும், அடிப்படைத் தேவைகளையும் வழங்க முடிந்தது. இந்த மாவட்டத்திற்கு செல்ல வேறு பாதைகள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. அந்த மாவட்ட மக்கள் நெகிழ்ச்சியுடன் இந்திய ராணுவத்திற்கு தங்களது நன்றியைத் தெரிவித்தனர்.