பெரும் சோகம்...  பிரிந்து சென்ற  கர்ப்பிணி மனைவி...கணவன் தூக்கிட்டு தற்கொலை... பாட்டியும் மயங்கி பலி!

 

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அயனாவரம் காலனி பகுதியில் வசித்து வருபவர்  நாசர்அலி. இவரது மகன் 22 வயது ஷாஜகான். இவர் கூலித்தொழில் செச்ய்து வருகிறார். இவருக்கும்  தஞ்சையில் வசித்து வரும் 22 வயது பாத்திமாவுக்கும் 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. பின்னர் கணவன் - மனைவி இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டதாக தெரிகிறது. 


 
இதையடுத்து கர்ப்பிணியாக இருந்த பாத்திமா கணவரிடம் கோபித்துக்கொண்டு தஞ்சையில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். ஷாஜகான் பலமுறை சென்று தனது மனைவியை அழைத்தும், அவர் வரவில்லை என்று கூறப்படுகிறது. கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பாத்திமாவுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. ஆனால் குழந்தை பிறந்த தகவலை கூட தங்களுக்கு சொல்லாததால் ஷாஜகான் மன விரக்தியில் இருந்துள்ளார். இந்நிலையில் ஷாஜகான் நேற்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.


 

இதையடுத்து அவரது உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர். அப்போது ஷாஜகானின் பாட்டியான அமீனா (75) பேரன் இறந்த அதிர்ச்சியில் கதறி அழுதபோது மயங்கி விழுந்தார். உறவினர்கள் அவர் அருகே சென்று பார்த்தபோது அவர் உயிரிழந்தது தெரியவந்தது. பேரன் இறந்த அதிர்ச்சியில் பாட்டியும் உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!