பெரும் அதிர்ச்சி.. வெளியூர் பெண்களை வைத்து பாலியல் தொழில்.. 2 புரோக்கர்கள் அதிரடியாக கைது..!

 

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் வெளியூர் பெண்களை வைத்து பாலியல் தொழிலில் ஈடுபடுவதாக போலீசாருக்கு அடிக்கடி புகார் வந்தது. இதனையடுத்து, பல்லடம் அருகே மகாலட்சுமி நகரின் குறிப்பிட்ட பகுதியில் இந்த சம்பவம் நடப்பதை உறுதி செய்த போலீசார், வீட்டை சுற்றி வளைத்தனர். போலீசார் விரைந்து வந்து வீட்டுக்குள் சோதனை நடத்தினர்.

வெளியூரில் இருந்து அழைத்து வரப்பட்ட பெண்ணை போலீசார் மீட்டு திருப்பூரில் உள்ள காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர். சோதனையின் போது இந்த ஒரு பெண் மட்டும் வீட்டில் இருந்ததால் மேலும் எத்தனை பெண்கள் இந்த தொழிலில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இது தொடர்பாக திரிபுராவை சேர்ந்த முகமது நூர் ஹாசன், மகாலட்சுமி நகரை சேர்ந்த ஜெகநாதன் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். பட்டப்பகலில் குடியிருப்பு பகுதிகளுக்கு நடுவே விபச்சார கும்பல் ஒன்று பிடிபட்டது அப்பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க