ஜார்கண்ட் முதல்வராக மீண்டும் பதவியேற்றார் ஹேமந்த் சோரன்!

 

ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வரும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் செயல் தலைவருமான ஹேமந்த் சோரன், சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் ஜனவரி 31ஆம் தேதி அமலாக்க இயக்குநரகத்தால் கைது செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து அவர் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். ஜார்கண்ட் உயர்நீதிமன்றம் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை தாமதப்படுத்தியதை அடுத்து, கடந்த பிப்ரவரி மாதம் ஹேமந்த் சோரன் உச்ச நீதிமன்றத்தை அணுகினார். ஆனால் அதுவும் பலனளிக்கவில்லை.

அதுமட்டுமல்லாமல், சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலின் போது பிரச்சாரம் செய்வதற்காக அவர் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை நீதிமன்றம் நிராகரித்தது. இந்நிலையில் ஜாமீன் கோரி ஜார்கண்ட் உயர் நீதிமன்றத்தில் ஹேமந்த் சோரன் புதிய மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கின் விசாரணையில், ஹேமந்த் சோரனின் தண்டனைக்கு போதிய காரணங்கள் இல்லை என்று கூறி உயர்நீதிமன்றம் ஜாமீனில் விடுதலை செய்தது. 5 மாதங்களுக்கு பிறகு ஹேமந்த் சோரன் சிறையில் இருந்து வெளியே வந்தார்.

இந்நிலையில், ஜார்க்கண்ட் ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணனிடம் தற்போதைய முதல்வர் சம்பை சோரன் நேற்று ராஜினாமா கடிதம் அளித்தார். சம்பய் சோரனின் ராஜினாமா கடிதத்தை கவர்னர் ஏற்றுக்கொண்டார். மேலும், ஜார்கண்ட் மாநிலத்தில் ஆட்சியமைக்க ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணனை சந்தித்து ஹேமந்த் சோரன் உரிமை கோரினார்.

இந்நிலையில், ஹேமந்த் சோரனை ஆட்சி அமைக்க கவர்னர் அழைப்பு விடுத்துள்ளார். இதையடுத்து ஜார்கண்ட் மாநில முதல்வராக ஹேமந்த் சோரன் வரும் 7ம் தேதி பதவியேற்பார் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று மாலை 4.30 மணியளவில் ஹேமந்த் சோரன் மீண்டும் பதவியேற்றார். ஹேமந்த் சோரனுக்கு ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். 

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!