பெரும் பதற்றம்.. வெடித்த வன்முறை.. 4 பேர் பலி.. 200க்கும் மேற்பட்டோர் படுகாயம்.. விவரம் இதோ..!

 

உத்தரகாண்ட் மாநிலம் ஹல்த்வானி மாவட்டத்தில் உள்ள பன்புல்ரா காவல் நிலையம் அருகே உள்ள மதரஸா பள்ளியை முறையான அனுமதியின்றி கட்டியதாக நகராட்சி அதிகாரிகள் கூறி இடித்துள்ளனர். இது அப்பகுதியில் வசிக்கும் முஸ்லிம்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதுடன், அவர்கள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் மற்றும் நகராட்சி ஊழியர்கள் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதைத் தொடர்ந்து காவல் நிலையத்தை அடித்து நொறுக்கிய கும்பல், வாகனங்களுக்கு தீ வைத்தது.வன்முறை காரணமாக அங்கு பதற்றம் நிலவுவதால் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.



வன்முறையில் போலீசார், பத்திரிகையாளர்கள் உட்பட 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வர உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தமி, இணையதள சேவையை முடக்கி, கலவரக்காரர்களை கண்டதும் சுட்டுக் கொல்ல உத்தரவிட்டுள்ளார்.

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க