அதிர்ச்சி...கல்யாண விருந்து சாப்பிட்டு 2  பேர் பலி... 20 பேர் கவலைக்கிடம்!

 

கடலூர் மாவட்டம்  குள்ளஞ்சாவடி  புலியூர் கிராமத்தில் வசித்து வருபவர்  பள்ளி நீரோடையைச் சேர்ந்த பெண்ணுக்கும் மே 3ம் தேதி திருமணம்  செய்ய முடிவு செய்யப்பட்டிருந்தது.  அதன்படி கடந்த 3ம் தேதி பெரிய குள்ளஞ்சாவடியில்  உள்ள திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற்றது. திருமணம் நடைபெற்ற உடன் காலை உணவு பரிமாறப்பட்டது.  திருமண விழாவிற்கு வந்த இரு வீட்டாரும்,  நண்பர்களும் காலை உணவினை சாப்பிட்டனர்.


புலியூர் கிராமத்தில் வசித்து வரும்  திருவேங்கடம் என்பவரும் உணவு சாப்பிட்டுவிட்டு வீட்டுக்கு சென்றுள்ளார் . வீட்டுக்கு சென்ற சிறிது நேரத்தில் அவருக்கு திடீரென வாந்தியும், வயிற்றுப் போக்கு ஏற்பட்டுள்ளது. அத்துடன் உடல் சோர்வு அடைந்தது. இதனையடுத்து உடனடியாக அவரை மீட்டு   தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.  பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இதே போல் திருமண நிகழ்ச்சியில் உணவு சாப்பிட்ட புலியூரை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, ராஜ்குமார், சுதாகர் , உக்கிரமூர்த்தி,  கண்ணன் , பழனிவேல் , சிங்காரவேல் , சிகாமணி , தேவர்,  சின்னமணி,  பொன்னையா, சின்னம்மாள் உள்ளிட்ட இருபதுக்கும் மேற்பட்டோருக்கு அடுத்தடுத்து வாந்தி,  வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது.


 
அனைவரும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இருப்பினும் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திருவேங்கடம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.  அதேபோல் வைத்தியலிங்கம் மகன் நாராயணசாமியும் நேற்று பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.  பாதிக்கப்பட்டவர்களுக்கு   தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  இது குறித்து  போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!