பெரும் அதிர்ச்சி.. ஆற்றில் குளிக்கும் போது விபரீதம்.. முதியவரை கடித்து குதறிய முதலை!

 

கர்நாடகாவின் பெலகாவி மாவட்டத்தில் உள்ள சிக்கோடி தாலுகாவில் தாதகங்கா ஆறு பாய்கிறது. இந்த ஆற்றில் நேற்று காலை அதே பகுதியை சேர்ந்த மகாதேவ புன்னப்பா (வயது 72) என்ற முதியவர் குளிக்க சென்றார். அங்கு அவர் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென ஒரு முதலை ஆற்றில் வந்தது.

ஆற்றில் குளித்த மக்கள் முதலை வருவதை கண்டு அதிர்ச்சியடைந்து உடனடியாக கரைக்கு திரும்பினர். முதியவர் கரைக்குத் திரும்புவதற்குள், முதலை அவரைக் கடித்து ஆற்றில் இழுத்துச் சென்றது. முதலையின் பிடியில் சிக்கிய முதியவர் அலறி துடித்தார். ஆனால் அவரைக் காப்பாற்ற யாரும் முன்வரவில்லை. முதலை கடித்ததில் பலத்த காயம் அடைந்த மகாதேவ புன்னப்பா பரிதாபமாக இறந்தார்.

இதுபற்றி தகவல் கிடைத்ததும் போலீசார் தீயணைப்பு படையினருடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து முதியவரின் உடலை தோண்டி எடுத்தனர். இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!