பெரும் சோகம்.. கண்டித்ததால் விபரீதம்.. மகள் இறந்த 3வது நாளில் தாயும் தற்கொலை!

 

வேலூர் அடுக்கம்பாறையை அடுத்த ஆற்காட்டான் குடிசையை சேர்ந்தவர் பாபு (வயது 49), லாரி டிரைவர். இவரது மனைவி தமிழரசி (வயது 39). இவர்களது மகள் அக்சயா (வயது 14). இவர்களுக்கு சென்னை ஆவடியில் சொந்த வீடு உள்ளது. பாபு குடும்பத்துடன் சென்னையில் வசித்து வந்தார். அக்சயா அங்குள்ள தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். தினமும் பள்ளிக்கு சென்றாலும் சரியாக படிக்கவில்லை என தெரிகிறது. இதனால், அந்த பள்ளியின் ஆசிரியர்கள் அக்சயாவின் பெற்றோரை நேரில் பள்ளிக்கு வரவழைத்து அக்சயா மீது புகார் அளித்தனர்.

இதனால் தமிழரசி தனது மகள் அக்சயாவை கண்டித்துள்ளார். பள்ளிக்கு சென்றால் ஆசிரியர்கள் திட்டுவதாலும், வீட்டில் பெற்றோர்கள் திட்டுவதாலும் விரக்தியடைந்த அக்சயா கடந்த 3ம் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து அவரது உடல் சொந்த ஊரான ஆற்கட்டான் குடிசைக்கு கொண்டு வரப்பட்டு கடந்த 1ம் தேதி அடக்கம் செய்யப்பட்டது. கணவன்-மனைவி இருவரும் மகள் இறந்த துக்கத்தில் சென்னை செல்லாமல் ஆற்கட்டான் குடிசையில் தங்கினர்.

அதே சமயம், தன் மகள் கண்டித்ததால் தற்கொலை செய்து கொண்டதாக தமிழரசி தினமும் பாபுவிடம் புலம்பி வந்துள்ளார். பாபு தன் மனைவிக்கு ஆறுதல் கூறிக்கொண்டிருந்தான். இந்நிலையில் தமிழரசி நேற்று அதிகாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின் விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். மகள் இறந்த 3வது நாளில் தாயும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!