பெரும் பரபரப்பு... நடுரோட்டில் சீக்கிய தலைவர் சுட்டுக் கொலை... சிசிடிவி காட்சிகள் வெளியானது!

 

நேற்று காலை சுமார் 6.30 மணியளவில், உத்தரகாண்ட் மாநிலம் நானாகமட்டா அருகே உள்ள உத்தம்சிங் பகுதியில் சீக்கிய தலைவர் பாபா தர்செம் சிங், இருசக்கர வாகனத்தில் வந்த 2 மர்ம நபர்களால் நடுரோட்டில் சுட்டுக் கொல்லப்பட்டது பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 

நானாகமட்டா பகுதியில் உள்ள குருத்வாராவில், கரசேவையின் தலைவராக இருந்தார் பாபா தர்சேம் சிங். மர்மநபர்கள் திடீரென பாபா தர்செம் சிங்கை துப்பாக்கியால் சுட்டுவிட்டு அங்கிருந்து தங்களது இருசக்கர வாகனத்தில் ஏறி தப்பிச் சென்றனர். அந்த பகுதியில் இருந்தவர்கள், ரத்த வெள்ளத்தில் மிதந்த பாபா தர்சேம் சிங்கை உடனடியாக மீட்டு, அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் பாபா தர்செம் சிங் வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர்.

குருநாதர் கர சேவகரை துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அங்கு அமைதியை நிலைநாட்ட கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். சீக்கிய சமூகத்தினர் அமைதி காக்குமாறு அதிகாரிகள் வலியுறுத்தினர் மற்றும் குற்றவாளிகளை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கை முதன்மைப்படுத்தி அனைத்து கோணங்களிலும் விரிவான விசாரணை நடத்த சிறப்பு அதிரடிப்படை (எஸ்டிஎஃப்) உத்தரவிடப்பட்டுள்ளது. தாக்குதல் நடத்தியவர்களை அடையாளம் காண்பதைத் தவிர, கொலைக்குப் பின்னால் ஏதேனும் பெரிய சதி உள்ளதா என்பதைக் கண்டறியவும் போலீசார் ஆர்வமாக உள்ளனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்