பெரும் பரபரப்பு.. டாஸ்மாக்கில் முற்றிய வாக்குவாதம்.. மதுபாட்டிகளால் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்ட விபரீதம்..!

 

சங்கரன்கோவிலில் மதுபானக்கடையில், ஏற்பட்ட தகராறில் ஒருவரை ஒருவர் மதுபாட்டில்களால் தாக்கிக்கொள்ளும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் இருந்து புளியங்குடி செல்லும் சாலையில் உள்ள தனியார் மதுபானக்கடையில், மதுபாட்டிலை தட்டிவிட்டதாக மாரியப்பன் என்பவருடன் 4 பேர் கொண்ட கும்பல் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.  

இதனையடுத்து தகராறு முற்றவே இருவரும் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கத் தொடங்கினர். தொடர்ந்து கும்பலாக சேர்ந்து மாரியப்பனை தாக்க தொடங்கினர். இதில் ஆத்திரமடைந்த மாரியப்பன் கையில் இருந்த மதுபாட்டிலைக்கொண்டு அந்த கும்பலில் ஒருவரை தலையில் தாக்கவே அவர் படுகாயம் அடைந்ததாக கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தின் சிசிடிவி கட்சியானது தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்தில் தாக்குதலில் ஈடுபட்ட மாரியப்பனை கைது செய்த சங்கரன்கோவில் காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க