டெக் உலகில் மாஸ் காட்டும் கூகுள் பிக்சல் 8..!

 
கூகுள் பிக்ஸல் 8 செல்போன் வர்த்தகத்தில் இன்று முதல் புழக்கத்திற்கு வந்துள்ளது.

ஸ்மார்ட்போன் உலகையை கையில் அடக்கி வைத்துக்கொள்ளும் அற்புதமான கண்டுபிடிப்பு. ஸ்மார்ட்போன் வர்த்தகம் தான் அதிகளவில் ஈர்க்கப்படும் ஒன்றாகவும் இருந்து வருகிறது. அந்த வகையில் ஸ்மார்ட்போன் தயாரிக்கும் நிறுவனமும் மிகவும் பிரசித்திப் பெற்ற ஒன்று. குறிப்பாக, ஆப்பிள், விவோ, ஓப்போ, சாம்சங் இவை எல்லாம் மொபைல் உலகின் ஜாம்பவான்கள். 

இந்நிலையில் இணையதளத்தை கட்டி ஆள்கின்ற கூகுள் தனது நிறுவனத்தில் செல்போனை தயாரித்து கூகுள் பிக்ஸ் சீரிஸ் வடிவில் வெளிவிட்டு வருகிறது. இருப்பினும் பெரிய நிறுவனங்களை நெருங்க முடியாமல் தான் இருந்து வருகிறது. அந்த வகையில் கூகுள் பிக்ஸ் 8 செல்போன் தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்திய நேரப்படி இன்று மாலை 7.30 மணி அளவில் நியூயார்க் நகரில் இந்த செல்போன் வெளியிடப்பட்டது. வழக்கமாக இது போன்ற நிகழ்வுகளை சில நாட்களுக்கு முன்பே திட்டமிட்டு அறிவிக்கும் கூகுள் நிறுவனம், 5 மணி நேரத்திற்கு முன்பு தான் இந்த நிகழ்வை அறிவித்திருப்பதால் மற்ற செல்போன் நிறுவனங்களிடையே பெரும் கலக்கம் நிலவி வருகிறது. எதிர்பார்க்க முடியாத அளவிற்கு சிறப்பான அம்சங்களைக் கொண்டு இந்த செல்போன் இருக்கும் என்பது பயனாளர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.