தீ விபத்தில் இருந்து தப்பிக்க குளியலறைக்குள் சென்று ஒளிந்துக் கொண்ட சிறுமிகள்.. அடுத்து நடந்த விபரீதம்!

 

வடக்கு டெல்லியின் சதர் பஜார் பகுதியில் உள்ள குடியிருப்பில் இன்று மதியம் இந்த சம்பவம் நடந்துள்ளது. 14 மற்றும் 12 வயது சகோதரிகள் தங்கள் குடியிருப்பில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் இருந்து தப்பிக்க குளியலறையில் ஒளிந்து கொண்டதால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு இறந்தனர்.  மதியம் 2.10 மணியளவில் தீ விபத்து குறித்து தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினருக்கு அழைப்பு வந்தது.

குடியிருப்பின் ஒவ்வொரு அறையையும் திறந்து தேடியதில், முதல் மாடியின் குளியலறையில் 2 சிறுமிகள் மயங்கிய நிலையில் மீட்கப்பட்டனர். அவர்கள் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு 2 சிறுமிகளையும் பரிசோதித்த டாக்டர்கள் மூச்சு திணறல் காரணமாக அவர்கள் இறந்ததை உறுதி செய்தனர்.

வீடு முழுவதுமாக தீப்பிடித்து எரிந்ததையடுத்து, இரு சகோதரிகளும் தப்பிக்க குளியலறையில் ஒளிந்துள்ளனர். இதன் மூலம் தீயில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொண்டாலும், புகை மண்டலம் சூழ்ந்ததால் மயங்கி விழுந்தனர்.தீ வளையத்தில் சிக்கிய பெரியவர்கள், மீட்புக் குழுவினரிடம் உதவி கேட்டு சத்தம் போட்டு உயிருடன் தப்பினர். மேலும் புகை சூழ்ந்ததால் மயக்கமடைந்த சிறுமிகள் மூச்சுத் திணறி உயிரிழந்தனர்.

போலீஸ் விசாரணையில் இறந்த சிறுமிகளின் பெயர் குலாஷ்னா (14), அனயா (12) என தெரியவந்தது. துணை போலீஸ் கமிஷனர் மனோஜ் குமார் மீனா தலைமையில் போலீசார் தீ விபத்துக்கான காரணம் மற்றும் இறந்தவரின் பின்னணி குறித்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்