குழந்தை இல்லாததால் அடிக்கடி சண்டை.. மனைவியை கொலை செய்து விட்டு கணவன் தற்கொலை!

 

கடலூர் மாவட்டம் வேப்பூர் தாலுகா வீ.லட்சுமிநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சக்திவேல் (33).  இவர் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி ஸ்வேதா (20). தம்பதிக்கு குழந்தைகள் இல்லை. இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் நேற்று காலை சக்திவேல் தனது மைத்துனர் செங்கமலை (எ) சுகிருக்கு செல்போன் மூலம் வாட்ஸ் அப் செய்தி அனுப்பியுள்ளார்.

அதில், 'உன் சகோதரி இறந்துவிட்டாள். என்னுடைய பொக்லைனுக்கு  பின்னால் உடல் புதைக்கப்பட்டுள்ளது. நானும் தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன்' என்று தெரிவித்துள்ளார். பின்னர் அவர் உடனே போலீசாருக்கு தெரிவித்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த செங்கமலை மற்றும் போலீசார்   ஸ்வேதாவின் உடலை தோண்டி எடுத்தனர்.

மேலும் அருகில் உள்ள மரத்தில் தூக்கில் தொங்கிய சக்திவேலின் உடலையும் கைப்பற்றினர். இதுகுறித்து கீழ்குப்பம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!