தென்னிந்தியாவிலேயே முதல் முறை.. அரசு மருத்துவமனையில் செயற்கை கருத்தரித்தல் மையம்!

 

தமிழகத்தில் மட்டுமின்றி தென்னிந்தியாவிலேயே முதன்முறையாக அரசு மருத்துவமனையில் செயற்கை கருத்தரித்தல் மையம் அமைக்கப்பட்டுள்ளது என மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்மா.சுப்பிரமணியன்  தெரிவித்துள்ளார். .எழும்பூரில் உள்ள மருத்துவம் மற்றும் பொது நலத்துறையின் மகளிர் மருத்துவ மையம் மற்றும் அரசு தாய் நல மருத்துவமனை ஆகியவற்றில் அதிநவீன செயற்கை கருத்தரித்தல் மையம் மற்றும் பிரசவ வளாக திறப்பு விழா இன்று நடைபெற்றது.

இதில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் திரு.சுப்பிரமணியன், இந்து சமய நலத்துறை அமைச்சர் சேகர் பாபு, மருத்துவம் மற்றும் மக்கள் நலத்துறை கூடுதல் தலைமைச் செயலர் ககன் தீப் சிங் பேடி, அரசு சென்னை மருத்துவக் கல்லூரி முதல்வர் தெரணி ராஜன், மத்தியப் பிரதேச நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன். மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

அமைச்சர் மா. சுப்பிரமணியன், செயற்கை கருத்தரித்தல் மையத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இதைத்தொடர்ந்து மேடையில் பேசிய அவர், 'தமிழகத்தில் மட்டுமின்றி தென்னிந்தியாவிலேயே முதன்முறையாக அரசு மருத்துவமனையில்   கருத்தரித்தல் மையம் தொடங்கப்பட்டிருக்கிறது. டெல்லி, சண்டிகர், உத்தரபிரதேசம் போன்ற மாநிலங்களில் அரசு மருத்துவமனைகளில் செயற்கை கருத்தரித்தல்  மையங்கள் இருந்தாலும், தனியார் மருத்துவமனைகளில் கட்டணம் வசூலிப்பது போல் இரண்டரை லட்சம் ரூபாய் வரை வசூலிக்கின்றனர்.

ஆனால் தமிழகத்தில் தொடங்கப்பட்டுள்ள செயற்கை கருவூட்டல் மையம் முற்றிலும் இலவசமாக இயக்கப்பட உள்ளது. ஒரு சில கருத்தரித்தல் மையங்கள் மனிதாபிமானமற்ற நடைமுறைகளை கடைபிடித்தன. ஈரோடு, சேலம் போன்ற 5 தனியார் கருத்தரிப்பு மையங்களில் முறைகேடுகள் கண்டறியப்பட்டு சீல் வைக்கப்பட்டது. இதுபோன்ற அவலங்கள் இனி நடக்கக்கூடாது என்பதற்காக எழும்பூர் மருத்துவமனையில் அரசு சார்பில் செயற்கை கருத்தரித்தல் மையம் தொடங்கியுள்ளோம். 8 படுக்கைகள் கொண்ட அதிநவீன பிரசவ அறை திறக்கப்பட்டது. தனியார் மருத்துவமனையில் கூட இல்லாத தரத்தில் கட்டப்பட்டுள்ளது.

குழந்தையின்மைக்கான காரணங்கள் உடற்பயிற்சியின்மை, உடல் பருமன், உணவுப் பழக்கத்தில் ஏற்படும் மாற்றங்கள். 30 வயதிற்குட்பட்ட பெண்களில் 3.9% பேர் கருவுறுதல் பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. செயற்கை கருத்தரித்தலுக்கு 7 முதல் 10 லட்சம் செலவாகும் நிலையில், இங்கு முற்றிலும் இலவசமாக செய்யப்படுகிறது என இவ்வாறு அவர் கூறினார்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!