துருக்கியில் இரவு விடுதியில் பயங்கர தீ விபத்து... 29 பேர் உடல் கருகி பலியான சோகம்!

 

துருக்கியில் இரவு விடுதி ஒன்றில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதில், தீயில் சிக்கி 29 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

<a href=https://youtube.com/embed/IqSnqMLje3Q?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/IqSnqMLje3Q/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" style="border: 0px; overflow: hidden"" title="YouTube video player" width="560">

துருக்கியில், இஸ்தான்புல் நகரில் உயரமான கட்டிடம் ஒன்றின் அடித்தளத்தில் அமைந்துள்ள இரவு விடுதி ஒன்றில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக இஸ்தான்புல் ஆளுநர் தாவுட் குல் தெரிவித்துள்ளார்.

தீ விபத்துக்கான காரணம் என்னவென்று இதுவரை தெரியவில்லை. இந்த தீ விபத்தில் 29 பேர் உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழந்தவர்கள் குறித்த விவரங்களும் முழுமையாக வெளியாகவில்லை. அவர்கள் இரவு விடுதியின் ஊழியர்களாக அல்லது ஒப்பந்தகாரர்களா என்பது தெளிவாகத் தெரியவில்லை. இரவு விடுதியின் மேலாளர், மற்றும் பணியாளர்கள் என இந்த விபத்து தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டு விசாரணைகள் தொடர்ந்து நடைப்பெற்று வருகிறது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்