பிரிந்து சென்ற மனைவி.. விரக்தியில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை.. அதிர்ச்சியில் பாட்டியும் மரணம்!

 

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அயனாவரம் காலனியை சேர்ந்தவர் நாசர் அலி. இவரது மகன் ஷாஜகான் (வயது 22). கூலி தொழிலாளி. இரண்டு ஆண்டுகளுக்கு முன், ஷாஜகானுக்கும், தஞ்சாவூரைச் சேர்ந்த பாத்திமாவுக்கும் (22) திருமணம் நடந்தது. அதன்பிறகு கணவன்-மனைவி இடையே அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. அதன்பின், கர்ப்பமாக இருந்த பாத்திமா, கணவருடன் கோபித்துக் கொண்டு, தஞ்சையில் உள்ள தாய் வீட்டுக்குச் சென்றார்.  ஷாஜகான் தனது மனைவியை பலமுறை சென்று பார்த்தாலும் அவர் வரவில்லை என்று கூறப்படுகிறது.

கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பாத்திமாவுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. ஆனால் குழந்தை பிறந்தது குறித்து அவர்களுக்கு தகவல் கூட தெரிவிக்காததால் ஷாஜகான் விரக்தியில் இருந்தார். இந்நிலையில் நேற்று ஷாஜகான் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து அவரது உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர். அப்போது பேரன் இறந்த அதிர்ச்சியில் கதறி அழுத ஷாஜகானின் பாட்டி அமீனா (75) மயங்கி விழுந்தார். உறவினர்கள் சென்று பார்த்தபோது அவர் இறந்து கிடந்தார். பேரன் இறந்த அதிர்ச்சியில் பாட்டி இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும் ஏற்படுத்தியது.

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!