இசைப்பள்ளியில் உதவித்தொகையுடன் மாணவர் சேர்க்கை!
தமிழக அரசின் கலை பண்பாட்டு துறையின் கீழ் செயல்பட்டு வரும் காஞ்சிபுரம் மாவட்ட அரசு இசைப்பள்ளியில் மாணவர் சேர்க்கை தொடங்கப்பட்டுள்ளது. இது குறித்து காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்தப் பள்ளியில் 12 முதல் 25 வயது வரை உள்ள ஆண் பெண் என இருபாலரும் இந்த பயிற்சியில் சேர்ந்து பயன் அடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
3 ஆண்டுகள் பயிற்சிக்கு முதல் ஆண்டு ரூ350 , 2 மற்றும் 3ம் ஆண்டுக்கு ரூ325 கட்டணமாக செலுத்த வேண்டும். ஒவ்வொரு மாதமும் மாணவர்களுக்கு நான் ஒரு ரூபாய் கல்வி உதவி தொகையும் வழங்கப்படும். இது குறித்த கூடுதல் தகவல்களை அறிய மாணவர்கள் 9442572948 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார்.
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!