இயக்குநர் ஆர்.கே.செல்வமணிக்கு வெளியில் வரமுடியாத பிடிவாரண்ட்!!

 

  2016ல்  இயக்குனர் ஆர்.கே. செல்வமணி மற்றும் காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ. அருண் அன்பரசு இருவரும்  தனியார் தொலைக்காட்சியில் பேட்டி அளித்திருந்தனர். இதில் பிரபல பைனான்சியர் முகுந்த்சந்த் போத்ரா குறித்து சில சர்ச்சையான  கருத்துகளை தெரிவித்திருந்தனர்.

இதன் அடிப்படையில்  வர்கள் இருவருக்கும் எதிராக சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் போத்ரா அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.  வழக்கு நிலுவையில் இருந்து வரும்த நிலையில், தயாரிப்பாளர் போத்ரா காலமானார்.   ஆனால் இந்த வழக்கை அவரது மகன் ககன் போத்ரா தொடர்ந்து நடத்தி வருகிறார்.

இந்த வழக்கு இன்று 15 வது மாஜிஸ்திரேட்டு முன்பு விசாரணைக்கு வந்த நிலையில் ஆர்.கே.செல்வமணி ஆஜராக வில்லை. அவர் சார்பில் வழக்கறிஞரும் வரவில்லை  இதையடுத்து, அவருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்டை நீதிபதி பிறப்பித்துள்ளார். அத்துடன் வழக்கின் விசாரணை   செப்டம்பர் 22 ந்தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவு பிறப்பித்தார். 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை