இன்று முதல் கல்லூரிகளில் மீண்டும் மாணவர் சேர்க்கை... மிஸ் பண்ணாதீங்க.. விண்ணப்பங்கள் வரவேற்பு!

 
தமிழகத்தில் 12ம் வகுப்பு தேர்ச்சியடைந்த மாணவர்கள் கல்லூரிகளில் சேர விண்ணப்பித்து, மாணவர் சேர்க்கையும் முடிவடைந்த நிலையில், இன்று முதல்  மீண்டும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி இன்று ஜூலை 3ம் தேதி  புதன்கிழமை முதல் ஜூலை 5ம் தேதி வரை TNGASA இணையதளத்தில் மாணவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  ஜூலை 8ம் தேதி முதல் மாணவர் சேர்க்கையை நடத்த கல்லூரி முதல்வர்களுக்கு உயர்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.  ஒரு பாடப்பிரிவில் சேர்ந்த மாணவர்கள் வேறோரு பாடப்பிரிவில் மாற விரும்பினால் அந்த துறையில் காலியிடம் இருப்பின் வாய்ப்பு வழங்க வேண்டும்.

ஏற்கனவே விண்ணப்பித்து சேர்க்கை பெற்று துறையில் இணையாத மாணவர்களின் இடங்களையும் நிரப்ப வேண்டும் என கூறப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் நடத்தி முடிக்கப்பட்ட கலந்தாய்வுகளில் 164 அரசு கலை கல்லூரிகளில் 2 சுற்று கலந்தாய்வு முடிவில் 63 சதவீத மாணவர் சேர்க்கை நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!