கோவை மாநகராட்சி மேயர் திடீர் ராஜினாமா!

 


 
கோவை மாநகராட்சியில் திமுக மேயர் கல்பனா ஆனந்தகுமார். இவர் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  மேயர் கல்பனா மாநகராட்சி ஆணையரிடம் ராஜினாமா கடிதத்தை தனது உதவியாளர் மூலம் கொடுத்தனுப்பினார்.  அந்த ராஜினாமா கடிதத்தில் உடல் நிலையை காரணம் காட்டி கல்பனா பதவியை ராஜினாமா செய்திருப்பதாக   கோவை மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் தெரிவித்துள்ளார்.


மருத்துவ காரணங்களுக்காக பதவியை ராஜினாமா செய்வதாக, தனது கடிதத்தில் மேயர் கல்பனா தெரிவித்துள்ளார். இருந்தாலும், திமுகவில் உட்கட்சி மோதல் வெடித்திருப்பதால் தான் மேயர் ராஜினாமா செய்திருப்பதாக  கட்சியின் நிர்வாகிகளே கூறி வருகின்றனர்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!