CBSE, ICS பள்ளிகளை சேர்க்க முடியாது ... தமிழக அரசு திட்டவட்டம்!

 
 தமிழகம் முழுவதும் பின் தங்கிய மாணவர்களுக்காக 25 சதவீதம் இடஒதுக்கீட்டில் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. தற்போது இது குறித்து தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை அளித்துள்ளது. அதன்படி  கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கான 25 சதவீதம் இட ஒதுக்கீட்டில் சிபிஎஸ்இ, ஐ சி எஸ் பள்ளிகளை சேர்க்க முடியாது என தமிழ்நாடு அரசு உயர் நீதிமன்றத்தில் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.


சிபிஎஸ்சி மற்றும் ஐசிஎஸ் பள்ளிகளுக்கு மாநில அரசு கட்டணம் நிர்ணயம் செய்வதில்லை.இதன் அடிப்படையில்  சிபிஎஸ்சி மற்றும் ஐசிஎஸ் பள்ளிகளை 25% ஒதுக்கீட்டில் சேர்க்க முடியாது என உறுதி பட கூறியுள்ளது.  இத்திட்டத்தின் கீழ் வசிக்கும் இடத்திலிருந்து 5 கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள தனியார் பள்ளிகளில் இலவச கல்விக்கான இட ஒதுக்கீட்டை தமிழக அரசு வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!