இன்று விக்கிரவாண்டியில் இடைத்தேர்தல்... வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்!
விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. சார்பாக அன்னியூர் சிவா, பா.ம.க. சார்பாக சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சி சார்பாக டாக்டர் அபிநயா உட்பட மொத்தம் 29 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அதிமுகவும், தேமுதிகவும் இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன. இதனையடுத்து திமுக, பாமக, நாதக கட்சிகளுக்கு இடையே போட்டி நிலவுகிறது.
தி.மு.க. வேட்பாளர் அன்னியூர் சிவாவை ஆதரித்து முதல்வர் ஸ்டாலின் வீடியோ மூலம் பிரச்சாரம் செய்தார். அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் தொகுதி முழுவதும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதேபோல் பா.ம.க. வேட்பாளர் சி.அன்புமணியை ஆதரித்து கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ், கட்சி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், அவருடைய மனைவி சௌமியா அன்புமணி மற்றும் தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் டாக்டர் அபிநயாவை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பல்வேறு இடங்களில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
நேற்று முன் தினத்துடன் பிரச்சாரம் ஓய்ந்த நிலையில் இன்று வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகளை தேர்தல் கமிஷன் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு 276 வாக்குச்சாவடி மையங்களில் நடக்கிறது. தேர்தலை அமைதியாகவும், நேர்மையாகவும் நடத்துவதற்கான அனைத்து முன்னேற்பாடு பணிகளையும் தேர்தல் கமிஷன் மேற்கொண்டு வருகிறது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூலை 13ம் தேதி வாக்கு எண்ணும் மையமான பனையபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் எண்ணப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!