மக்களே உஷார்... 17% வங்கி பாஸ்வேர்ட்டுகளுக்கு பாதுகாப்பில்லை !
இந்தியாவில் நிதி குறித்த மோசடிகள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. குறிப்பாக வங்கி கணக்கு குறித்த தகவல்கள் பாதுகாக்கப்படாததன் விளைவு தான் இது என்கின்றனர் நிதிஆலோசகர்கள். இதன் விளைவாக பல மோசடிகளுக்கு ஆளாக நேரிடும். இந்தியாவில் சராசரியாக 17 சதவீதம் பேர் வங்கி தொடர்பான கடவுச்சொற்களை தங்கள் மொபைல் போனில் பாதுகாப்பாற்ற முறையில் வைத்திருப்பதாக தற்போது ஒரு கணக்கெடுப்பு அறிக்கை வெளியாகி உள்ளது.
அதன்படி 34 சதவீத மக்கள் தங்கள் பாஸ்வேர்டை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்கின்றனர். 4 சதவீதம் பேர் தங்கள் மொபைல் போனின் தொடர்பு பட்டியலில் பாஸ்வேர்டை வைத்துள்ளனர். 4 சதவீதம் பேர் தங்களுடைய ரகசிய கடவுச்சொற்களை மொபைல் பாஸ்வேர்டு செயலியில் சேமித்து வைத்துள்ளனர். 5 சதவீதம் பேர் பாஸ்வேர்டு குறித்த குறிப்புகளை தங்கள் பர்சில் வைத்திருப்பதாக கூறியுள்ளனர்.
சர்வேயில் கலந்து கொண்டவர்களில் 14 சதவீதம் பேர் தங்கள் பாஸ்வேர்டுகளை எங்குமே பகிரவில்லை, எழுதியும் வைக்கவில்லை எனவும் பொதுவாக நினைவில் வைத்திருப்பதாகவும் கூறியுள்ளனர். பல தங்களுடைய கடவுச்சொற்களை மொபைல் எண், பிறந்த தேதி, Password, Password1234, 1234554321 என வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!