பள்ளிகளில் மாணவர்களுக்கு வங்கிக் கணக்கு...பள்ளிக்கல்வித்துறை திடீர் உத்தரவு!

 

 “தமிழ்நாட்டில் அனைத்து பள்ளிகளிலும் 1 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவர்களும்  கல்வி பயில பல்வேறு  உதவி மற்றும் ஊக்கத்தொகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. அவை உரிய பயனாளிகளுக்கு குறித்த நேரத்தில் நேரடியாக வழங்கப்படுவதை உறுதி செய்யும் வகையில்  வங்கிக் கணக்கில்  நேரடியாக பணத்தை அனுப்பும் முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதனை ஆக்கப்பூர்வமாக செயல்படுத்தும் வகையில்  மாணவர்களின் பெயரில் வங்கிக் கணக்கு இருக்க வேண்டியது   அவசியம் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

இதன் அடிப்படையில்  பள்ளிகளிலேயே வங்கிக்கணக்கு தொடங்க வயது அடிப்படையில் 2 நிலைகளில் பணிகள் மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக, 5 முதல் 10 வயதுக்கு உள்பட்ட மாணவர்களுக்கு புதிய வங்கிக் கணக்கு அவர்களின் பெற்றோர் அல்லது காப்பாளரின் பெயரில் இணைக் கணக்காக தொடங்கப்படும். மாணவர், பெற்றோர் இணைந்து இந்த கணக்கை பராமரிக்க முடியும். ஆரம்பத் தொகை ஏதுமில்லாத கணக்காக இவை தொடங்கப்படும். அதன்படி 10 வயதுக்கு மேற்பட்ட மாணவர்களுக்கு வங்கிக் கணக்கு தொடங்க ஆதார் நகல், மாணவரின் அடையாள அட்டை, பாஸ்போர்ட் அளவு புகைப்படம் அவசியம்.


பள்ளித் தலைமையாசிரியர்கள் தங்களது பள்ளியில் பயிலும் மாணவர்கள் அனைவருக்கும் வங்கிக்கணக்கு தொடங்குதல், ஆதார்  புதுப்பித்தல் இவைகளை  மேற்கொள்வதை உறுதிசெய்ய வேண்டும். பள்ளிக்கு வங்கிப் பணியாளர்கள் வந்திருந்து  மாணவர்களுக்கான வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும். வங்கிக்கணக்கு விவரங்கள் எமிஸ் தளத்தில் விடுபட்டிருந்தால் அவற்றை மாணவர்களிடம் இருந்து பெற்று பதிவு செய்ய வேண்டும்” என சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!