கிராமி விழாவில் பெரும் பரபரப்பு.. மூன்று விருதுகளை வென்ற பிரபல இசைக் கலைஞர் கைது..!

 

இசைத்துறையில் வழங்கப்படும் உயரிய விருதான கிராமி விருதுகளை வென்ற இசையமைப்பாளர் கில்லர் மைக் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள Gipto.com சதுக்கத்தில் 66வது கிராமி விருது வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. உலகம் முழுவதிலுமிருந்து இசைக்கலைஞர்கள் இதில் கலந்துகொண்டனர். இந்தியாவின் சக்தி ஆல்பம் கிராமி விருது பெற்றுள்ளது. 

இதனையடுத்து அவர் அங்கிருந்த சிலரிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. உடனே அவரை போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர். இது தொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தகவல்களின்படி, கில்லர் மைக் கைது செய்யப்பட்ட சில மணிநேரங்களுக்குப் பிறகு விடுவிக்கப்பட்டார். இசைத்துறையின் உயரிய விருதான 3 கிராமி விருதுகளை வென்ற இசைக் கலைஞர் கைது செய்யப்பட்ட சம்பவம் அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு அவரது ரசிகர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க