பேருந்தில் ப்ரேக் பிடிக்கல ...    கீழே குதித்த அமர்நாத் யாத்ரீகர்கள்... ஷாக் வீடியோ!

 
 

 

ஆன்மிக சுற்றுலாவாக பல பகுதிகளில் இருந்தும் யாத்ரீகர்கள் அமர்நாத்துக்கு பேருந்தில் பயணம் செய்தனர். அப்போது திடீரென பேருந்தில் ப்ரேக் பிடிக்கவில்லை. இதனால் பயணிகள் அச்சத்தில் அலறி கூச்சலிட்டனர். அமர்நாத்திலிருந்து 40 பயணிகள் ஏற்றிக்கொண்டு ஹோஷியார்பூருக்கு பேருந்து ஒன்று சென்றது.ஹோஷியார்பூருக்கு சென்று கொண்டிருந்த அந்த  பேருந்தில் திடீரென பிரேக் பிடிக்கவில்லை.  

பிரேக் செயலிழந்ததால் பேருந்தை  கட்டுப்படுத்த முடியாமல் நாச்லானா, பனிஹால் அருகே வாகனத்தை நிறுத்த டிரைவர் சிரமப்பட்டனர்.  பாதுகாப்புப் பணியாளர்கள்  பேருந்தின் சக்கரங்களுக்கு அடியில் கற்களை வைத்து பேருந்தை நிறுத்தினார்கள். இச்சம்பவத்தில் 6 ஆண்கள், 3 பெண்கள், ஒரு குழந்தை உட்பட 10 பேர் படுகாயம அடைந்தனர்.  இராணுவம்  ஆம்புலன்ஸ்களுடன் சம்பவ இடத்திற்கு வந்து காயமடைந்த அனைவருக்கும் மருத்துவ உதவி மற்றும் முதலுதவி அளித்தது. இது குறித்த  வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.