ஆழ்வார் திருமஞ்சணம் | உகாதி கொண்டாட்டம் துவக்கம்| இன்று திருப்பதி திருமலையில் விஐபி பிரேக் தரிசனம் ரத்து!
இன்று காலை 6 மணிக்கு ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்பசுவாமி மற்றும் விஷ்வக்சேனருக்கு சிறப்பு பிரசாதம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து காலை 7 மணி முதல் 9 மணிக்குள் சுவாமி விமான பிரகாரம் மற்றும் கொடிமரத்தை சுற்றி ஊர்வலமாக கோவிலுக்குள் நுழைவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உகாதி பண்டிகையை முன்னிட்டு ஏப்ரல் 9-ஆம் தேதி TTD நடத்தும் திருமலை ஆர்ஜித சேவை, அஷ்டதள பாதபத்மாராதனம், கல்யாணோத்ஸவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோத்ஸவம் ஆகிய நிகழ்ச்சிகளை TTD ரத்து செய்துள்ளது. உகாதி ஆஸ்தானத்தை முன்னிட்டு இன்று ஏப்ரல் 2ம் தேதி செவ்வாய்க்கிழமை ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு இன்று விஐபி பிரேக் தரிசனத்தை TTD நிர்வாகம் ரத்து செய்துள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!