மாஸ் வீடியோ... ஆதித்யா எல் 1 பூமி, நிலாவுடன் செல்பி !!
Sep 7, 2023, 18:08 IST
ஜூலை 14ம் தேதி இஸ்ரோ நிலவின் தென்பகுதியை ஆய்வு செய்ய சந்திராயன் 3ஐ ஏவியது. அதே போல் சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா எல்1 விண்கலத்தையும் இந்தியா ஏவியுள்ளது. இந்நிலையில் ஆதித்யா எல்1 விண்கலம் பூமியையும், நிலவையும் சேர்த்து எடுத்த புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ளது.இந்த புகைப்படத்தை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.
இதன் சுற்றுவட்ட பாதை 2 முறை அதிகரிக்கப்பட்டு, அடுத்த சுற்றுக்கு செப்டம்பர் 10ம் தேதி உயர்த்தப்பட இருப்பதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. தற்போது பூமியின் சுற்றுப்பாதையில் சுற்றி வரும் ஆதித்யா எல்1, பூமி மற்றும் நிலவுடன் செஃல்பி எடுத்து அனுப்பியுள்ளது. இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!