படப்பிடிப்பில் மயங்கிய நடிகை சமந்தா... ரசிகர்கள் அதிர்ச்சி!

 

 தமிழ் திரையுலகில்  ‘பாணா காத்தாடி’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை சமந்தா. இந்த படம்  ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.  அதனைத் தொடர்ந்து, மாஸ்கோவின் காவிரி, நடுநசி நாய்கள், நான் ஈ, நீ தானே என் பொன்வசந்தம், கத்தி, தெறி என அடுத்தடுத்த படங்களில் இவரை முண்ணனி கதாநாயகிகளில் பட்டியலில் கொண்டு சேர்த்தன.  இதனையடுத்து  நடிகை சமந்தா 10 ஆண்டுகளை கடந்து தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக உள்ளார். 
 இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தெலுங்கு நட்சத்திரம்  நாக சைத்தானியாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.  

இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2022ல் விவாகரத்து பெற்றனர்.  அதன் பிறகு நடிகை சமந்தா மயோசிடிஸ் எனும் அரியவகை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இதனால் திரையுலகிற்கு ஒரு வருடம் நடிப்பிற்கு முற்றுப்புள்ளி வைத்தார்.  தற்போது, புதிய இந்தி படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கும் நிலையில்  தமிழ் படங்களில் நடிக்கவும் பேசி வருகின்றனர். அவர் நடித்துள்ள சிட்டாடல் வெப் தொடர் ப்ரைம் வீடியோவில் வெளியாக இருக்கிறது.
இந்நிலையில், படப்பிடிப்பின்போது நடிகை சமந்தா மயங்கி விழுந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  இது குறித்து அவர் கூறுகையில், மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்ட போது  நான் ‘சிட்டாடல்’ வெப் தொடர் மற்றும் ‘குஷி’ படத்தில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்தேன்.

குஷி படப்பிடிப்பிற்கு பிறகு  வெப் தொடரில் நடிக்க வேண்டி இருந்தது.   மிக அதிகமான ஆக்சன் காட்சிகள் இருந்ததால் நோயுடன் போராடியபடியே நடிக்க வேண்டியிருந்தது.  ஒரு கட்டத்தில் படப்பிடிப்பில் மயங்கி விழுந்தேன். அல்கேஷ் அந்த சமயத்தில் தனக்கு பெருமளவு வழிகாட்டியாக இருந்தார். இதனால் தான் அந்தப் படத்தில் நன்றாக நடித்து தேர்ச்சிபெற்றேன் எனக் கூறினார்.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்