நடிகை கோவை சரளா திருமணம் குறித்து மனம் திறந்த பேட்டி. .!

 

 தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகை  கோவை சரளா. தனது திருமணம் குறித்து கோவை சரளா மனம் திறந்துள்ளார். இது குறித்து அவர் "நான் அரசியலுக்கு வர இருப்பதாக தகவல்கள் பரவி வருகின்றன. நிச்சயம் அரசியலுக்கு வர மாட்டேன். திருமணமும் செய்து கொள்ள மாட்டேன்.  பிறக்கும்போது தனியாக பிறக்கிறோம். இறக்கும்போதும் தனியாகத்தான் இறக்கிறோம். இடையில் இந்த உறவுகள் தேவையில்லை என்பதே என்னுடைய எண்ணம். இருக்கும் வரை சுதந்திரமாக வாழ வேண்டும் என்பதற்காகத் தான் திருமணமே செய்து கொள்ளவில்லை.  திருமணமாகி குழந்தைகள் இருக்கும் பல பெற்றோர்கள் அவர்களை குழந்தைகள் பார்த்துக் கொள்ளாத காரணத்தால் கடைசியில் தனியாகவே வாழ்க்கையை கழிக்கிறார்கள்.

எனக்கு யாரையும் சார்ந்து வாழ விருப்பம் இல்லை. இதுவரை 900 படங்களில் நடித்துவிட்டேன்.  இதில் 15 படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளேன். நான் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகை. அவர் படங்களை பார்த்துத்தான் நடிகையாக வேண்டும் என்ற ஆசையே வந்தது.  சமீபத்தில் எனக்கு உடல்நிலை சரியில்லை என்றும் உறவினர்கள் வீட்டை விட்டு விரட்டியதால் மருத்துவமனையில்  இருப்பதாகவும் செலவுக்கு பணம் இல்லாமல் கஷ்டப்படுவதாகவும் வதந்திகள் பரவின.  இந்த விஷயத்தில் துளி கூட உண்மை கிடையாது. சகோதரிகள் என்னை நன்றாக பார்த்துக்கொள்கிறார்கள். எனக்கு நண்பர்கள் யாரும் இல்லை. வீட்டில் போர் அடித்தால் கோவில்களுக்கு சென்று வருவேன்” எனக் கூறியுள்ளார்.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!