ஹாத்ராஸ் சம்பவம்: குற்றவாளிகள் மீது நடவடிக்கை அவசியம்... போலே பாபா பேட்டி!

 
 

ஹாத்ரஸ் சம்பவத்திற்கு காரணமான போலே பாபா எனும் சூரஜ்பால் ஜாத்தவ், இந்த சம்பவத்திற்கு பிறகு முதன்முறையான செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார். இதில் அவர், சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை அவசியம் எனத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து செய்தி நிறுவனம் ஒன்றுடன் பேசியிருக்கும் போலே பாபா, நாம் ஜுலை 2 சம்பவத்திற்கு பின் மிகவும் கவலையுடன் இருக்கிறோம். இந்த சங்கடத்திலிருந்து மீண்டுவர பிரபு நமக்கு சக்தி அளிக்க வேண்டும். அனைத்தையும் விசாரித்து வரும் அரசு மீது நம்பிக்கை வைக்க வேண்டும். 
இதன் விசாரணையில் இறங்கியுள்ள குழுவின் அனைத்து உறுப்பினர்களும், அதிகாரிகளும் நியாயம் வழங்குவார்கள். பலியானவர்களின் குடும்பங்கள், பாதிக்கப்பட்டவர்கள் நலனில் உடன் இருப்பதாக எங்கள் வழக்கறிஞர் ஏ.பி.சிங் மூலமாக விசாரணைக்குழுவிடம் தெரிவித்துள்ளோம்.

தற்போதைக்கு அரசின் விசாரணைக் குழுவிற்கு ஒத்துழைப்பு அளிப்பது அனைவரது கடமை. இதற்கான ஆக்கமும், ஊக்கமும் அவசியம்’ எனத் தெரிவித்துள்ளார்.கடந்த ஜுலை 2 இல் ஹாத்ரஸின் சிக்கந்தராராவின் முகல்கடி கிராமத்தில் நடத்திய கூட்டத்தில் நெரிசல் விபத்து நிகழ்ந்தது. இதில், 112 பெண்கள் உட்பட 121 பேர் பலியாகி விட்டனர்.இந்த சம்பவத்திற்கு பின் தலைமறைவான போலே பாபா பலியானவர்களின் குடும்பத்தாரை சந்தித்து ஆறுதல் கூறவில்லை. தற்போது தாம் இருக்கும் இடத்தை குறிப்பிடாமல் செய்து நிறுவனத்திடம் போலே பாபா முதன்முறையாக பேசியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!