கொடூரம்.. ஸ்குரூ, நெயில் பாலிஷ் கொடுத்து  குழந்தை கொலை.. தந்தையின் காதலி வெறிச்செயல்..!!

 

அமெரிக்காவில் உள்ள பென்சில்வேனியாவில் பெண் ஒருவர் தனது காதலனின் குழந்தைக்கு பேட்டரிகள், திருகுகள் மற்றும் நெயில் பாலிஷ் ரிமூவர் ஆகியவற்றை ஊட்டி விஷம் கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் குழந்தை ஐரிஸ் ரீட்டா அல்ஃபெராவைக் கொன்றதற்காக அலிசியா ஓவன்ஸ் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டார்.

பிரேதப் பரிசோதனையில் குழந்தையின் இரத்தத்தில் அசிட்டோன் அளவு அபாயகரமான அளவில் இருப்பதுதான் இறப்புக்கான காரணம் என்று தெரியவந்ததை அடுத்து அலிசியா கைது செய்யப்பட்டார். பென்சில்வேனியா அட்டர்னி ஜெனரல் மைக்கேல் ஹென்றி, விசாரணையில் அலிசியா, 20, குழந்தையைக் கொல்வதற்கு முன்பு கொலை செய்வதற்கான வழிகளை ஆராய்ந்தது தெரியவந்தது.

“இந்த வழக்கு இதயத்தை உடைக்கிறது. ஒரு குழந்தையைக் கொல்ல யாராவது வேண்டுமென்றே இதைச் செய்வார்கள் என்று நம்புவது கடினம். ஆனால் விசாரணையில் அவர் குழந்தையைக் கொல்வதற்காக பல மாதங்களாக நுணுக்கமாக ஆராய்ச்சி செய்திருப்பது தெரியவந்துள்ளது என்று அட்டர்னி ஜெனரல் ஹென்றி கூறினார். ஜூன் 25, 2023 அன்று, 20 வயதான அலிசியா குழந்தை ஐரிஸின் தந்தை பெய்லி ஜேக்கபியுடன் இருந்தார். கடைக்கு செல்வதற்காக வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். சிறிது நேரம் கழித்து, ஓவன்ஸுக்கு அலிசியாவிடமிருந்து தனது மகளுக்கு ஏதோ நடந்தது என்று அழைப்பு வந்தது.

பெய்லி ஜேக்கப் வீட்டிற்கு விரைந்தார், தனது குழந்தை பேசாமல் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். 18 மாத குழந்தை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. ஒரு மணி நேரத்தில், அவர் மேல் சிகிச்சைக்காக பிட்ஸ்பர்க்கில் உள்ள மருத்துவமனைக்கு விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டார். நான்கு நாட்களுக்குப் பிறகு, குழந்தை ஐரிஸ் பரிதாபமாக இறந்தது. ஐரிஸ் தனது தாயார் எமிலி ஆல்ஃபெரா மற்றும் அவரது தாத்தா பாட்டிகளுடன் வசித்து வந்ததாக கூறப்படுகிறது, மேலும் அவரது தந்தை ஜேக்கபி அவ்வப்போது அவரை சந்திப்பார்.

குழந்தை படுக்கையில் இருந்து விழுந்து தலையில் அடிபட்டதாக அலிசியா போலீசில் புகார் செய்தார். ஆனால் பிரேத பரிசோதனை அறிக்கையில் குழந்தையின் வயிற்றில் பட்டன் வடிவ பேட்டரிகள், உலோக திருகு போன்றவை கண்டுபிடிக்கப்பட்டது. குழந்தை இறப்பதற்கு சில மாதங்களுக்கு முன்பு அவை உட்கொண்டிருக்க வேண்டும் என்றும் கண்டறியப்பட்டது. சந்தேகத்தின் பேரில் அலிசியாவை விசாரித்தபோது, ​​​​அவர் குழந்தைக்கு நெயில் பாலிஷ் போன்ற நச்சு அழகுசாதனப் பொருட்களைக் கொடுத்ததையும் போலீசார் கண்டுபிடித்தனர்.

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

அடக்கொடுமையே.. 112 வயசுல 8 வது கல்யாணம்..... மணமகனை வலைவீசி தேடும் பாட்டி... !

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க!