500 பெண்களுடன் தொடர்பு.. கணவன் செல்போனில் கொட்டி கிடந்த ஆபாச படங்கள்.. ஷாக் ஆன கர்ப்பிணி மனைவி..!

 

தனது கணவருக்கு 500க்கும் மேற்பட்ட பெண்களுடன் தொடர்பு இருப்பதாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பெண் ஒருவர் மனு தாக்கல் செய்துள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஆர்த்தி என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், எனக்கும் - விவேக்ராஜுக்கும் திருமணமாகி ஒன்றாக வசித்து வந்தோம். இந்நிலையில், எனது கணவரின் செல்போனை எடுத்து பார்த்தபோது, ​​அதில் பல பெண்களிடம் ஆபாச வீடியோ கால்களின் ஸ்கிரீன் ஷாட்கள் மற்றும் அவரது அந்தரங்க உறுப்புகளின் படங்கள் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தேன்.

மேலும், இவரது கணவர் வங்கியில் பணிபுரிவதால், அங்கு வரும் பெண்கள் மற்றும் கல்லூரி மாணவிகளிடம் பேசி, சுமார் 500 முதல் 1000 வரை ஆபாசமான படங்கள் மற்றும் வீடியோக்களை எடுத்துள்ளார். இதுகுறித்து எனது கணவர் மற்றும் அவரது பெற்றோரிடம் கூறியபோது, ​​இதை யாரிடமாவது சொன்னால் கொன்று விடுவதாக மிரட்டியுள்ளனர். மேலும் அவர் இரண்டு மாத கர்ப்பிணி என்பதை கூட பார்க்காமல் அடித்து துன்புறுத்தியதால், கரு கலைக்கப்பட்டது. இது தொடர்பாக தஞ்சாவூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. ஆனால் அந்த புகார் மீது போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எனவே தஞ்சை மகளிர் போலீசார் என் கணவர் மீது அளித்த புகாரை விசாரிக்க தடை விதிக்க வேண்டும். அதுமட்டுமின்றி வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி சுகுமார் குழு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவுக்கு தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் சிபிசிஐடி பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை நீதிபதி ஒத்திவைத்தார்.

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க