சோகம்.. கணவன் - மனைவி சண்டையில் சிக்கி உயிரிழந்த இரண்டரை வயது குழந்தை..!

 

சங்கரன்கோவில்  அருகே  குடும்ப  தகராறில் இரண்டரை  வயது குழந்தை பலியான சம்பவம் பெரும் சோகத்தை  ஏற்படுத்தியுள்ளது.தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள கோ.மருதப்பபுரத்தை சேர்ந்தவர் ஜெய்சங்கர்  பேச்சியம்மாள்  தம்பதியினர்.   இவர்களுக்கு கனிஷ் ஆதித்யா என்ற மகனும், மகிஷா என்ற பெண் குழந்தையும் உள்ளனர். 

கடந்த  இரண்டு  நாட்களுக்கு  முன்  கணவன் மனைவிக்கு  இடையே ஏற்பட்ட  குடும்ப தகராறில்  பேச்சியம்மாள்  வீட்டைவிட்டு  வெளியேறியுள்ளார். மனைவியை  தேடி  சென்ற  ஜெய்சங்கர்  மதுபோதையில்  இருசக்கர  வாகனத்தில்  இரண்டு  குழந்தைகளையும்  அழைத்துக் கொண்டு  செல்லும்பொழுது,   எதிர்பாராத  விதமாக   விபத்து  நேர்ந்துள்ளது. அந்த விபத்தில்  மகிஷா என்ற இரண்டரை வயது குழந்தை  பரிதாபமாக  உயிர்ழந்துள்ளார்.  

மற்றொரு குழந்தையான கனிஷ் ஆதித்யா மற்றும் ஜெய்சங்கர்  படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும்  இந்த விபத்து குறித்து  காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க