அதிர்ச்சி.. சிறையிலேயே கருவுறும் பெண் கைதிகள்.. வெளிவந்த பகீர் தகவல்..!

 

கல்கத்தா உயர் நீதிமன்றத்தில், மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள சிறைகள் மற்றும் சீர்திருத்த இல்லங்களில் சீர்திருத்தங்கள் தொடர்பான வழக்குகளைக் குறிப்பிடும் போது, ​​நீதிமன்றத்தின் நண்பர்களாகக் கருதப்படும் அமிக்ஸ் கியூரி சார்பில்  சிறையில் பெண்கள் கருவுறுகின்றனர் என புகார் தெரிவித்தனர். இந்த புகார் மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

இந்த மனுவில், "சிறையில் இருக்கும் போது பெண் கைதிகள் கர்ப்பமாகின்றனர். மேற்கு வங்கத்தில் உள்ள பல சிறைகளில் 196 குழந்தைகள் பிறந்து காவலில் வைக்கப்பட்டுள்ளனர். எனவே, பெண் கைதிகள் அடைக்கப்பட்டுள்ள பகுதிக்கு ஆண் சிறை ஊழியர்கள் செல்ல தடை விதிக்க வேண்டும். ” என்று குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்தில் சிறைச்சாலையில் நடத்தப்பட்ட சோதனையின் போது, ​​குறைந்தது 15 பெண் கைதிகள் தங்கள் குழந்தைகளுடன் இருந்தனர். இவர்கள் சிறையில் பிறந்த குழந்தைகள் என்பதால் இந்த தகவலை மேற்கோள் காட்டி இந்த வழக்கு ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கு திங்கள்கிழமை விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க