திருப்பூரில் ஒரு மர்மதேசம்.. கதிகலக்கும் குட்டிச்சாத்தான்? கலங்கிநிற்கும் கிராமம்..!
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் ஒட்டபாளையம் கிராமத்தில் நடைபெற்று வரும் பகீர் சம்பவத்தால் மக்கள் கடந்த 12 நாட்களாக இரவு நேரத்தில் தூக்கம் தொலைத்துள்ளனர். இரவு நேரங்களில் வீட்டு கூரை மீது தொடர்ந்து கற்கள் விழுந்த வண்ணம் இருந்தது. இதனால் அச்சமடைந்த அப்பகுதி பொதுமக்கள் அருகில் இருக்கும் கருப்பராயன் கோவிலில் தஞ்சம் அடைந்தனர். பொதுமக்களின் அச்சம் காரணமாக அந்த பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனையடுத்து அந்தப் பகுதி முழுவதும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு மின் விளக்குகள் அமைத்து கிரேன் உதவியுடன் தீவிர கண்காணிப்பு பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். ட்ரோன் கேமரா மூலமாகவும் தொடர் கண்காணிப்புக்களும் தொடர்ந்து வருகிறது. கற்கள் வீசப்பட்டதால் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழல் குறித்தும் பொதுமக்களின் பாதுகாப்பு குறித்தும் வட்டாட்சியர் மயில்சாமி கிராமங்களில் நேரடி ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
பொதுமக்கள் பாதுகாப்பாக இருப்பதாகவும், கற்கள் வீசும் நபர் குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருவதாகவும் தகவல் அளித்துள்ளனர். அப்பகுதி மக்கள் இது குறித்து தாங்கள் கடந்த 2 வாரங்களாக தூக்கமினறி தவித்து வருவதாகவும் விரைவில் தீர்வை ஏற்படுத்தித் தர வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தனர்.
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!