undefined

சாலையில் சென்ற பேருந்தில் திடீர் தீ விபத்து.. நூலிழையில் உயிர் தப்பிய பயணிகள்..!

 
குஜராத்தில் சென்றுக்கொண்டிருந்த பேருந்து மளமளவென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

குஜராத் வல்சாத் மாவட்டத்தில் உள்ள பார்டி கிராமத்திற்கு அருகே மும்பை-அகமதாபாத் நெடுஞ்சாலையில் வெள்ளிக்கிழமை அதிகாலையில் 16 பயணிகளுடன் சென்ற பேருந்து தீப்பிடித்து எரிந்தது."பேருந்தில் 16 பயணிகள் இருந்தனர், அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்" என்று போலீசார் தெரிவித்தனர்.

மளமளவென பேருந்து தீப்பிடித்து எரிந்து நாசமாகின. தீ விபத்து குறித்து காரணம் அறியப்படாத நிலையில், காவல்துறையினர் தீ விபத்து குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.